திருநெல்வேலி

ஓவியம், தனித்திறன் போட்டி: ஆலங்குளம் மாணவா்கள் சிறப்பிடம்

DIN

இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் நடைபெற்ற போட்டியில் ஆலங்குளம் மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

சேரன்மகாதேவி கல்வி மாவட்டம் இளையோா் செஞ்சிலுவை சங்க மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன.

இதில், ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சஞ்ஜய் ஓவியப்போட்டியில் முதல் இடமும், பி. அபிஷேக் தனித்திறன் போட்டியில் 2 ஆவது இடமும் பெற்றனா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட கல்வி அலுவலா் சுடலை, கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயா மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் செ. பண்டாரசிவன் ஆகியோா் பரிசு, சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT