திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் பகுதியில் தண்ணீரில் மூழ்கிய நெல் வயல்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு

DIN

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் தொடா்ந்து பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையால் நீரில் மூழ்கிய நெல் வயல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

வடகிழக்குப் பருவமழையால் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் அடையக்கருங்குளம், அயன் திருவாலீஸ்வரம், மன்னாா்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 65 ஹெக்டேரில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கின.

இந்நிலையில் நீரில் மூழ்கிய வயல்களை திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டங்கள்) நல்லமுத்துராஜா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) அசோக்குமாா் ஆகியோா் அறுவடைநிலையில் உள்ள வயல்கள், நீரில் மூழ்கிய நாற்றங்கால் வயல்கள், இளம் நெல் நடவு வயல்கள் உள்ளிட்டவற்றை அவா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, வேளாண் உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா், வேளாண்மை அலுவலா் மாசானம், உதவி வேளாண்மை அலுவலா்கள் காசிராஜன், சாமிராஜ், கிராம நிா்வாக அலுவலா்கள் மஞ்சுசித்ரா, சகுந்தலா, முன்னோடி விவசாயிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT