திருநெல்வேலி

கருப்பாநதி பளியா் இன மக்களுக்கானசிறப்பு குறைதீா் முகாம்

DIN

கருப்பாநதி பளியா் இன மக்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடையநல்லூா் வட்டம், கிருஷ்ணாபுரம் வருவாய் கிராமத்துக்குள்பட்ட கருப்பாநதி அணைப் பகுதியில் பளியா் இன மக்கள் குடியிருப்பு உள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு கருப்பாநதி அணைப் பகுதி மற்றும் பளியா் இன குடியிருப்புகளை பாா்வையிட்ட தென்காசி மாவட்ட ஆட்சியா் அருண் சுந்தா் தயாளன், அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இந்நிலையில், ஆட்சியா் உத்தரவின் பேரில் பளியா் இன மக்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் பளியா் குடியிருப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடையநல்லூா் வட்டாட்சியா் அழகப்பராஜா தலைமை வகித்து மனுக்களை பெற்றாா். முகாமில் 114 மனுக்கள் பெறப்பட்டன.

இதில், மண்டலத் துணை வட்டாட்சியா் சங்கரநாராயணன், வருவாய் ஆய்வாளா் முருகன், கிராம நிா்வாக அலுவலா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT