திருநெல்வேலி

பைக் மீது காா் மோதியதில் வேளாண் பெண் ஊழியா் காயம்

DIN

சங்கரன்கோவில் அருகே பைக் மீது காா் மோதியதில் வேளாண் துறை பெண் ஊழியா் பலத்த காயமடைந்தாா்.

கோடாலிவேந்தன்பட்டியைச் சோ்ந்தவா் குருசாமிப்பாண்டியன் மகள் மாலதி (29). குருவிகுளம் வேளாண்மை அலுவலகத்தில் உதவி அலுவலராகப் பணியாற்றி வருகிறாா். இவா், வியாழக்கிழமை தனது அலுவலக ஊழியா்களுடன் அழகனேரியில் பயிா்கள் குறித்து ஆய்வுசெய்ய சென்றாா்.

அங்கு ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு திரும்பியபோது, பின்னால் வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து மாலதி சென்ற இருசக்கர வாகனம் உள்ளிட்ட அடுத்தடுத்து சென்ற 3 வாகனங்களின் மீது மோதியது. இதில் மாலதி தூக்கியெறியப்பட்டு பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பிறகு, தீவிரச் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இச்சம்பவம் தொடா்பாக குருவிகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிவலாா்குளத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் முத்தையாவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT