திருநெல்வேலியில் ஆரோக்கிய அன்னை சிலையை கல்லால் தாக்கி மர்மநபர்கள் சேதப்படுத்தியதால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. பாளையங்கோட்டை பேருந்து நிலையம்-மேட்டுத்திடல் சாலையில் கிறிஸ்து ராஜா மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகள் பயின்று வருகிறார்கள். இப்பள்ளின் வாயில் அருகே ஆரோக்கிய அன்னை சிலை கண்ணாடி பேழைக்குள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. மாணவர்-மாணவிகள், பொதுமக்கள் நவநாள் காலங்களில் இந்த சொரூபம் முன்பு பிரார்த்தனை செய்வது வழக்கம்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் பள்ளி காவலாளிகள் பார்த்தபோது சிலையை மர்மநபர்கள் கல்வீசி தாக்கியது தெரியவந்தது. இதில் சிலை முன்பு இருந்த கண்ணாடி கதவு, பாஸ்டர் ஆப் பாரீஸில் செய்யப்பட்ட மாதா சிலை ஆகியவை சேதமடைந்தன.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள், பொதுமக்கள் பலர் திரண்டனர். தகவலறிநத்தும் பாளையங்கோட்டை போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.