திருநெல்வேலி

குடியிருப்புகளில் சிசிடிவி கேமரா: மக்களுக்கு போலீஸ் ஆலோசனை

DIN

குடியிருப்பு பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் தச்சநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு திருநெல்வேலி நகரம் குற்றப்பிரிவு உதவி ஆணையர் எஸ்கால் தலைமை வகித்தார். தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் சீதாலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தச்சநல்லூர்  பாலாஜி அவென்யூ பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து மக்களிடம் கலந்துரையாடப்பட்டது.  மேலும், சிசிடிவி கேமரா பொருத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில், பாலாஜி அவென்யூ குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT