திருநெல்வேலி

நெல்லையப்பர் கோயிலில் மஹா ம்ருத்யுஞ்ஜய ஜப வேள்வி

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் கோயிலில் மஹா ம்ருத்யுஞ்ஜய மந்த்ர ஜப வேள்வி

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் கோயிலில் மஹா ம்ருத்யுஞ்ஜய மந்த்ர ஜப வேள்வி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 
ஹிந்து ஆலய பாதுகாப்புக் குழுவின் நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் திருக்கோயில் கிளை சார்பில் உலக நன்மைக்காவும்,  மழை வளம் பெருகவும் வேண்டி மஹா ம்ருத்யுஞ்ஜய மந்த்ர ஜப வேள்வி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.  காலை 8.30 மணிக்கு மேல் வேள்வி பூஜைகள் நடைபெற்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த துறவிகள், பக்தர்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  கங்கை ஸ்நானம் செய்த காசி ருத்ராட்சம் பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்,  ஹிந்து ஆலய பாதுகாப்புக்குழுவின் மாநகரத் தலைவர் ஐ.குணதுரை,  துணைத் தலைவர் ஆர்.குணசீலன்,  அமைப்பாளர் ஆர்.ராஜகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT