திருநெல்வேலி

பாளை. அருகே அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

DIN


பாளையங்கோட்டை அருகே அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
பாளையங்கோட்டையை அடுத்த மணப்படைவீடை சேர்ந்தவர் சுருளிராஜன். அரசு ஒப்பந்ததாரர். இவர், வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். சனிக்கிழமை அதிகாலையில் அவருடைய வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சப்தம் கேட்டு சுருளிராஜன் வீட்டுக்கு வெளியே வந்தார். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பியோடினர்.
இதுகுறித்து சுருளிராஜன் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT