திருநெல்வேலி

நெல்லை வந்த ரயிலில் இளைஞர் சடலம் மீட்பு

DIN

திருநெல்வேலி சந்திப்பு நிலையத்துக்கு புதன்கிழமை வந்த விரைவு ரயிலில் கிடந்த இளைஞர் சடலத்தை ரயில்வே போலீஸார் மீட்டு, விசாரித்துவருகின்றனர்.
கோவையிலிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் விரைவு ரயில் புதன்கிழமை திருநெல்வேலி சந்திப்பு வந்தது. இதில், 2 பெட்டிகளை இணைக்கும் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத ஆண் சடலம் சிக்கியிருந்தது.
இதுகுறித்து ரயில்வே ஊழியர்கள் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில், சந்திப்பு ரயில் நிலைய ஆய்வாளர் அருள் ஜெயபால், போலீஸார் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக, இந்த ரயில் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து அரை மணிநேரம் தாமதமாக நாகர்கோவிலுக்கு புறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT