திருநெல்வேலி

கடையநல்லூர் அருகே விபத்து: 5 பேர் காயம்

DIN


கடையநல்லூர் அருகே சனிக்கிழமை கார் , ஆட்டோ, பைக் மோதியதில் 5 பேர் பலத்த காயம டைந்தனர்.
  கடையநல்லூரில் இருந்து புளியங்குடி நோக்கிச் சென்ற ஆட்டோவும்,  சென்னையிலிருந்து பொட்டல்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்த காரும், கிருஷ்ணாபுரத்தில் இருந்து சென்று கொண்டிருந்த பைக்கும், குமந்தாபுரம் வளைவில் மோதியதாம்.
இந்த விபத்தில் காரில் வந்த சென்னை, தண்டையார்பேட்டை , பட்டேல்நகரைச் சேர்ந்த அப்துல்வஹாப் மனைவி  ஹைருன்னிஸா(48) காயமடைந்தார். காரில் ஏர்பேக் செயல்பட்டதால் காரில் பயணித்த மற்ற 4 பேரும் காயம் இன்றி தப்பினர். மேலும்,  மேலக்கடையநல்லூர்  இந்திராநகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்  தட்சணாமூர்த்தி(38) , பைக்கை ஓட்டி வந்த  கிருஷ்ணாபுரம் மிட்டா ஆபிஸ் தெருவைச் சேர்ந்த கல்யாணி,  ஆட்டோவில் பயணித்த லட்சுமியூர் தங்கம்மாள் ( 50) , இடைகால் ரம்யா(34)  ஆகியோரும் காயமடைந்தனர்.
காயமடைந்த தட்சணாமூர்த்தி, ஹைருன்னிஸா, தங்கம்மாள் ஆகியோர் கடையநல்லூர்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து கடையநல்லூர்  போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT