திருநெல்வேலி

புளியங்குடி அருகே வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்

புளியங்குடி அருகே வேன் கவிழ்ந்ததில் 10 பேர் காயமடைந்தனர்.

DIN

புளியங்குடி அருகே வேன் கவிழ்ந்ததில் 10 பேர் காயமடைந்தனர்.
புளியங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ராஜபாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலைக்கு வியாழக்கிழமை இரவு பணியாளர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த வேன், புளியங்குடி
அய்யாபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது நிலைதடுமாறி கவிழ்ந்ததாம். இதில், வேனில் பயணம் செய்த புன்னையாபுரம் பேச்சியம்மாள் (21) உள்பட 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்
புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பேச்சியம்மாள் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புளியங்குடி போலீஸார் வழக்குப்
பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT