திருநெல்வேலி

விபத்தில் இளைஞர் பலி

DIN

சேர்ந்தமரம் அருகே விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சுரண்டை அருகே குலையநேரியைச் சேர்ந்தவர் ஹரி (19).  இவர், தனது மோட்டார் சைக்கிளில் சில தினங்களுக்கு முன் சொக்கம்பட்டியில் நடைபெற்ற கோயில் கொடை விழாவுக்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்தபோது நிகழ்ந்த சாலை விபத்தில் ஹரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஹரிக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி ஹரி இறந்தார். இதுகுறித்து, சேர்ந்தமரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT