திருநெல்வேலி

மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்: இருவர் கைது

DIN


புளியங்குடி அருகே  மணல் கடத்தி வந்த 2 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சொக்கம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீஸார் சிங்கிலிபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சிங்கிலிபட்டி பிரதான சாலையில் வட மாவட்டத்திலிருந்து மணல் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர்.  அதில் முறையான ஆவணமின்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. 
இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து,  லாரி ஓட்டுநரான திருச்சி மாவட்டம் துளுக்கம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த பொன்னையா மகன் பிச்சை (49),  திண்டுக்கல் மாவட்டம் புதூரைச் சேர்ந்த முத்துச்செட்டியார் மகன் கணபதி(48) ஆகிய இருவரைக் கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT