திருநெல்வேலி

சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில், தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில், தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதன்மை இயக்குநர் நிர்வாக பொறுப்பில் ஐ.ஏ.எஸ். அலுவலரை நியமிக்க வேண்டும்,  13ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, தென்காசி கோட்டத் தலைவர் முகம்மதுமுஸ்தபா தலைமை வகித்தார். கிளைத் தலைவர் கசங்காத்தான், ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலர் கோவிந்தன்,கோட்டச் செயலர் வேல்ராஜன், ஓய்வூதியர் சங்க நிர்வாகி மாரியப்பன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் துரைசிங், அகஸ்தியன், சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். சேகர் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT