திருநெல்வேலி

பாளை.யில் அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர், பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் முன், செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியில் இருப்பவர்களுக்கான ஊதியம், பணிஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் ஆகியவை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதைக் தடுக்கக் கோரி, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள், அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் திருநெல்வேலி கோட்டக்கிளை ஊழியர்கள் பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு திருநெல்வேலி கோட்டத் தலைவர்கள் டி.அழகுமுத்து, ஏ.சீனிவாச சொக்கலிங்கம், ஏ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர். கோட்டச் செயலர் எஸ்.கே ஜேக்கப் ராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார். இதில், கோட்டச் செயலர்கள் எஸ்.கே.பாட்சா, கே.சண்முகசுந்தரராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT