திருநெல்வேலி

பாளை.யில் திருஏடு வாசிப்பு திருவிழா

DIN

பாளையங்கோட்டை வடபகுதியில் உள்ள ஹரி ஓம் சக்தி நாராயண ஜோதிபதி தர்ம தாங்கலில் திருஏடு வாசிப்பு திருவிழாவையொட்டி வாகன பவனி மற்றும் அன்னதானம் ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் ஆண்டுதோறும் அகிலத்திரட்டு அம்மானை என்னும் திருஏடு வாசிப்பு திருவிழா நடைபெற்று வருகிறது.  அதன்படி நிகழாண்டுக்கான விழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது.  திரு ஏடு வாசிப்பு, இரவு உகப்பெருக்கு பணிவிடை  நடைபெற்று வருகிறது.  வெள்ளிக்கிழமை இரவு  உகப்பெருக்கு பணிவிடை, சிறப்பு அன்னதானம், 10 மணிக்கு  திருக்கல்யாண வாசிப்பு, 11 மணிக்கு அய்யா அன்னவாகனத்தில் பவனி ஆகியவை நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17)  மாலை 6 மணிக்கு பட்டாபிஷேக வாசிப்பு, இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் அய்யா வாகன பவனி, 9 மணிக்கு உகப்பெருக்கு பணிவிடை, சிறப்பு அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT