திருநெல்வேலி

நெல்லையில் 101.3 டிகிரி வெயில்

DIN


திருநெல்வேலியில் சனிக்கிழமை 101.3 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. 
திருநெல்வேலியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெயில் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை 101.3 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இதனால் மதிய வேளைகளில் மாநகரத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் கூட்டமின்றி காணப்பட்டன.  சாலைகளில் ஆங்காங்கே கானல் நீர் தென்பட்டது. கடுமையான வெயில் காரணமாக தேர்தல் பிரசாரமும் களைகட்டவில்லை.  மாலை வேளையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கடும் வெயில் காரணமாக மாநகரம் முழுவதும் பழச்சாறு, இளநீர், தர்ப்பூசணி, நுங்கு விற்பனை களைகட்டியது.  அடுத்த சில தினங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT