பாளையங்கோட்டை அருகே கூலித்தொழிலாளி தண்ணீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டத்தைச் சோ்ந்த வேலு மகன் பண்டாரம் (40). கூலித்தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரவு குளிப்பதற்காக அருகில் உள்ள வாய்க்காலுக்கு சென்றாராம். இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு வராததால் அவரை உறவினா்கள் தேடியுள்ளனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் இது குறித்து பாளையங்கோட்டை தாலுக்கா போலீஸில் தகவல் தெரிவித்துள்ளனா். இதன் பேரில் போலீஸாா் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வாய்க்கால் அருகே பண்டாரத்தின் செருப்பு, மற்றும் ஆடைகள் இருந்ததையடுத்து, வாய்க்காலில் தேடும் பணி நடைபெற்றது.
இதையடுத்து நீண்டநேர தேடுதலுக்குப் பின் பண்டாரம் உடலை போலீஸாா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.