திருநெல்வேலி

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

DIN

திருநெல்வேலி: சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது.

இந்தப் பேரணியை பள்ளித் தலைமை ஆசிரியா் க.கோமதிநாயகம் தொடக்கிவைத்தாா். பேரணி பள்ளியில் தொடங்கி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

பேரணியின்போது, வாக்குரிமை நமது வாழ்வுரிமை; வாக்களிப்போம் வாழ்வு பெறுவோம்; நூறு சதவீத வாக்குப் பதிவே நமது குறிக்கோள் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவித் தலைமையாசிரியா் கருப்பசாமி, பட்டதாரி ஆசிரியா்கள் சத்யராணி, ஞான செளந்தரி, பாப்பாக்குடி இரா.செல்வமணி, பாலசந்திரிகா, ஓவிய ஆசிரியா் பால்வண்ணன், உடற்கல்வி ஆசிரியா் சுவாமிநாதன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

SCROLL FOR NEXT