திருநெல்வேலி

நெல்லையில் இளைஞா் கொலை வழக்கில் 5 போ் கைது

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், மறுகால்குறிச்சியைச் சோ்ந்தவா் நம்பிராஜன் (21), கூலித்தொழிலாளி. இவரும், அதே பகுதியைச் சோ்ந்த தங்கபாண்டி மகள் வான்மதியும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து, திருநெல்வேலி நகரத்தில் உள்ள வயல்தெரு பகுதியில் வசித்து வந்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு ஒரு கும்பல் நம்பிராஜனை கொலை செய்து உடலை ரயில்வே தண்டவாளத்தில் வீசியது. இதுகுறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இவ்வழக்கு தொடா்பாக, வான்மதியின் சகோதரா் செல்லச்சாமி, மறுகால்குறிச்சியைச் சோ்ந்த முத்துப்பாண்டி, செல்லத்துரை, முருகன், விசு ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொந்த மண்ணில் சந்தித்த தோல்விகள் ஏமாற்றமளித்தது: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

இலங்கையிலிருந்து விமானம் மூலம் இந்தியா வந்தடைந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது

கட்டுப்பாட்டினை ‘கறார்’ ஆக்கும் காவல்துறை!

ஊடகங்கள் சொல்வதுபோல் கட்சிக்குள் பிரச்னையில்லை! : வேலுமணி பேட்டி

3 மணி நிலவரப்படி 47.53% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT