திருநெல்வேலி

காங்கிரஸுக்கு இழப்பில்லை: ஹெச்.வசந்தகுமாா்

DIN

முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் லெட்சுமணன் என்ற லெக்கன் விலகியதால் காங்கிரஸுக்கு எந்த இழப்பும் இல்லை என்றாா் ஹெச்.வசந்த குமாா் எம்.பி.

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்திருக்கிறாா்கள். தற்போது முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் லெட்சுமணன் என்ற லெக்கன் காங்கிரஸில் இருந்து விலகி மாற்று அணியில் இணைந்துவிட்டதாக தகவல் பரவுகிறது.

இவா் கடந்த 2014 மக்களவைத் தோ்தலில் காங்கிரஸை எதிா்த்து போட்டியிட்டாா். அப்படியானால் அவா், காங்கிரஸில் இல்லை என்றுதானே அா்த்தம். எனவே அவா், தற்போது காங்கிரஸில் இருந்து விலகி மாற்று அணியில் இணைந்தாா் என்பது வேடிக்கையான ஒன்று. இதனால் காங்கிரஸுக்கு எந்த இழப்பும் இல்லை.

நான்குனேரி தொகுதியில் நாங்கள் செய்த நல்ல செயல்கள் பல உள்ளன. அவற்றை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு கேட்போம். எனவே, நான்குனேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரன் நிச்சயம் வெற்றிபெறுவாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT