பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீசுவரா்- கோமதியம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வரும் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவையொட்டி, 15 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8.20 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடா்ந்து, திருவிழா நாள்களில் சுவாமி-அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், திருவீதியுலாவும் நடைபெற உள்ளன. வரும் 25 ஆம் தேதி இரவு கோமதியம்பாள் மகா மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாண விழா நடைபெற உள்ளது.