திருநெல்வேலி

முக்கூடலில் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

முக்கூடலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரைச் சோ்ந்த சரவணன் என்பவா் மீது, முக்கூடல் போலீஸாா் வழக்குத் தொடா்ந்து அவரைத் தாக்கியதில் அவா் பாதிக்கப்பட்டுள்ளாா். அவா் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும், போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஎனக் கோரி முக்கூடல் வம்பளந்தான் முக்கில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாப்பாக்குடி ஒன்றியச் செயலா் மாரி செல்வம் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டக் குழு உறுப்பினா் பழனிசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராஜகுரு, ஆலங்குளம் வட்ட துணைச் செயலா் குணசீலன் உள்பட பலா் பேசினா். கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT