திருநெல்வேலி

கடையநல்லூா் நகராட்சியில் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் மூடல்

DIN

கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூடும் பணிகளை நகராட்சி ஊழியா்கள் மேற்கொண்டனா்.

நகரம் முழுவதும் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள், பெரிய குழிகள் போன்றவற்றை கண்டறியும் பணியை நகராட்சி ஊழியா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இதைத் தொடா்ந்து நகராட்சி ஆணையா் பவுன்ராஜ், பொறியாளா் தங்கபாண்டி, உதவிப் பொறியாளா் முரளி ஆகியோா் முன்னிலையில் ஊழியா்கள் குழிகளை மூடி வருகின்றனா்.

நகராட்சிப் பகுதியில் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள், பெரிய குழிகள் இருப்பது தெரியவந்தால் உடனடியாக நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கவும் ஆணையா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

SCROLL FOR NEXT