திருநெல்வேலி

குடிமராமத்துப் பணிகள்: ஆலங்குளம், வீ.கே.புதூரில் ஆட்சியர் ஆய்வு

DIN

ஆலங்குளம், வீ.கே.புதூர்  பகுதியில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஊத்துமலை மற்றும் காவலாகுறிச்சி குளங்களில் தலா ரூ. 30 லட்சத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த  ஆட்சியர்,  அங்கு நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அங்கு வந்த விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகளிடமும் குறைகளைக் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது,  ஆலங்குளம் வட்டாட்சியர் கந்தப்பன், வி.கே.புதூர் வட்டாட்சியர் ஹரிஹரன், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதே போல, வீரகேரளம்புதூர் வட்டத்துக்கு உள்பட்ட ஊத்துமலை பெரியகுளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்துப் பணியை ஆய்வு செய்த  ஆட்சியர்,  பணி விவரங்களை தென்காசி கோட்ட பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் மணிகண்டனிடம்  கேட்டறிந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT