திருநெல்வேலி

பணகுடியில் பழைய துணி சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

DIN

பணகுடியில் பழைய துணி சேமிப்புக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் மினிலாரியும்  சேதமானது.
லெவஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் என்பவருக்குச் சொந்தமான  பழைய துணி சேமிப்பு கிடங்கு பணகுடி புறவழிச்சாலையில் உள்ளது. இந்தக் கிடங்கிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை புகை வெளியேறியதாம். விடுமுறை என்பதால் கிடங்கில் பணியாளர்கள் இல்லை. இந்த நிலையில், தீ மளமளவென  எரிந்ததுடன், கிடங்கின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மினிலாரியிலும் தீ பற்றியுள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில், வள்ளியூர் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.  இதனிடையே, சம்பவ இடத்தில் விசாரித்த பணகுடி போலீஸார் கூறுகையில், 'சேத மதிப்பு முழுமையாக தெரியவில்லை; தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கிறோம்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT