திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வண்ணார்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.29) நடைபெறுகிறது.
இது தொடர்பாக கிழக்கு மாவட்டச் செயலர் இரா.ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு திருநெல்வேலி வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச் சாலையில் உள்ள ஹோட்டல் அஃப்னா பார்க்கில் மாவட்டச் செயலர் இரா.ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், திமுக துணைப் பொதுச் செயலரும், நான்குனேரி சட்டப்பேரவை தொகுதி பொறுப்புக் குழுத் தலைவருமான ஐ.பெரியசாமி கலந்துகொள்கிறார்.
எனவே, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலர்கள், பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் ஆகியோர் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கூட்டத்தில், நான்குனேரி இடைத்தேர்தல், திமுகவின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.