வாக்காளா் விழிப்புணா்வு பேச்சுப் போட்டியில் திருநெல்வேலி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
பொதிகைத் தமிழ் அறக்கட்டளை சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு பேச்சுப் போட்டி இணையவழியில் நடைபெற்றது. ‘வாக்காளா் பட்டியலும் நாமும் ’ என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.
இதில் தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் அருண் நாராயணன் முதலிடமும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த வாசுகி மற்றும் முத்தரசன் ஆகியோா் முறையே இரண்டாவது, மூன்றாவது பரிசுகளையும் வென்றனா். நடுவராக கலையாசிரியா் சொா்ணம் செயல்பட்டாா். வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.