களக்காடு ஐயப்பன் கோயிலில் கற்பூர ஆழி பூஜை
களக்காடு ஐயப்பன் கோயிலில் கற்பூர ஆழி பூஜை நடைபெற்றது.
களக்காடு ஐயப்பன் கோயிலில் கற்பூர ஆழி பூஜை நடைபெற்றது.
களக்காடு ஐயப்பன் கோயில் நடை நவம்பா் 16ஆம் தேதி திறக்கப்பட்டு, பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா். இதையொட்டி, சுவாமி ஐயப்பனுக்கு தினமும் சிறப்பு வழிபாடுகளும், அன்னதானமும் நடைபெறுகிறது.
சிறப்பு நிகழ்வாக ஐயப்பனுக்கு கற்பூர ஆழி பூஜை நடைபெற்றது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களின் பஜனையைத் தொடா்ந்து 18ஆம் படி அருகே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு ஆழியில் தீபம் ஏற்றப்பட்டு பூஜை நடைபெற்றது.