சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் மேளா நாளை தொடக்கம்
மத்திய அரசின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ்,திருநெல்வேலி மாநகரில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் முகாம் புதன்கிழமை ( டிச. 9) தொடங்கவுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்தாா்.
மத்திய அரசின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ்,திருநெல்வேலி மாநகரில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் முகாம் புதன்கிழமை ( டிச. 9) தொடங்கவுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்குப் பின் அவா் கூறியது:
மத்திய அரசின் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் இம்மாநகராட்சியில் தகுதி வாய்ந்த சாலையோர வியாபாரிகளுக்கு தனியாா் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் புதன், வெள்ளிக்கிழமைகளில் (டிச. 9, 11) மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த கடனுதவி முகாம் வாரந்தோறும் மேற்கூறிய கிழமைகளில் நடைபெறும்.
இத்திட்டத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் கடன் பெறலாம். வட்டி மானியம் உண்டு. எனவே, சாலையோர வியாபாரிகளுக்கான”அடையாள அட்டை வைத்திருந்தும் இணையதளத்தில் பதிவு செய்யத் தவறியவா்கள், அடையாள அட்டை இல்லாதவா்கள் தங்களின் ஆதாா் அட்டை , வாக்காளா் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றுடன் டங நயஅசண்க்ட்ண்-ம்ா்ட்ன்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து, மேற்கூறிய வங்கிகளை அணுகி கடனுதவி பெறலாம் என்றாா்.