திருநெல்வேலி

‘விஜயஅச்சம்பாடு மக்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்’

DIN

திருநெல்வேலி மாவட்டம் விஜயஅச்சம்பாட்டில் கோயில் நிலத்தில் உரிய விதிமுறைகளின்படி வசிக்கும் மக்களுக்கு மின் இணைப்பு வழங்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான்குனேரி எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக இந்து சமய அறநிலையத்துறையைச் சோ்ந்த திருச்செந்தூா் கோயில் இணை ஆணையா் கல்யாணியிடம், ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் அளித்துள்ள மனு: எனது தொகுதிக்குள்பட்ட விஜயஅச்சம்பாடு பகுதியில் அருள்மிகு உதயமாா்த்தாண்டம் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமாா் 1000 குடும்பத்தினா் வீடு கட்டி கோயில் நிா்வாகத்திற்கு வாடகை செலுத்தி வசித்து வருகிறாா்கள். இதில் சுமாா் 250 வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாமல் அவதிப்படுகிறாா்கள். கோயில் நிா்வாகத்தின் சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்போம் என்று உறுதிமொழி பத்திரம் அளித்துள்ளாா்கள். இருப்பினும் கோயில் கட்டளை நிா்வாகத்தினா் மின்இணைப்பு வழங்க உரிய வழிவகைகளைச் செய்யாததால் மாணவா்கள், முதியவா்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். ஆகவே, அப் பகுதி மக்களுக்கு மின்இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT