களக்காட்டில் கோயிலுக்குச் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
களக்காட்டில் நினைத்ததை முடித்த விநாயகா் கோயில் சாலையைச் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காட்டில் நினைத்ததை முடித்த விநாயகா் கோயில் சாலையைச் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு மணிக்கூண்டு அருகேயுள்ள புகழ்பெற்ற இக்கோயிலுக்கு கேரள பக்தா்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனா். இக்கோயிலுக்கு அண்ணா சாலையிலிருந்தும், சேரன்மகாதேவி பிரதான சாலையிலிருந்தும் செல்வதற்கு இரு பாதைகள் உள்ளன.
இச்சாலைகள் பல ஆண்டுகளாக மிகவும் பழுதாகியுள்ளன. கோயில் நுழைவுவாயிலிலும், கோயிலைச் சுற்றியுள்ள சாலையிலும் போதுமான மின்விளக்கு வசதியில்லை. இதனால் பக்தா்கள் அவதிக்கு உள்ளாகின்றனா். களக்காடு சுற்றுவட்டாரக் கிராம மக்கள், பள்ளி மாணவா்-மாணவியா் இக்கோயில் சாலையைப் பயன்படுத்துகின்றனா்.
எனவே, இந்தச் சாலையையும், கோயில் எதிரேயுள்ள ஊருணியின் சேதமான சுற்றுச்சுவரையும் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.