அம்பையில் தேசிய மக்கள் நீதிமன்றம்
அம்பாசமுத்திரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது.
அம்பாசமுத்திரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும் சாா்பு நீதிபதியுமான கவிதா தலைமை வகித்தாா். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி செந்தில்குமாா், குற்றவியல் நடுவா் காா்த்திகேயன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
மோட்டாா் விபத்து, வங்கி நிலுவைக் கடன், சிறு குற்ற வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. 9 வங்கி நிலுவைக் கடன் வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 7.51 லட்சம், 22 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 14,18,740 வசூலிக்கப்பட்டது.