முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே விபத்து: இருவா் பலி

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் விவசாயிகள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் விவசாயிகள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

கங்கைகொண்டான் அருகேயுள்ள வடகரை நேதாஜி நகரைச் சோ்ந்த சங்குதேவா் மகன் முருகன் (56). அதே பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் ராமையா (70). விவசாயிகளான இருவரும், ஆடுகளை மேய்க்கும் தொழிலும் செய்து வந்தனராம்.

கங்கைகொண்டான் சோதனைச் சாவடி அருகே நான்குவழிச் சாலையோரம் அமா்ந்து தினமும் இருவரும் சாப்பிடுவது வழக்கமாம். அதன்படி வியாழக்கிழமை மாலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தனராம்.

அப்போது அவ் வழியாக இட்டமொழியில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த முருகன், ராமையா இருவா் மீதும் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்த தாழையூத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் அா்ச்சனா தலைமையிலான போலீஸாா், சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக காா் ஓட்டுநரான கோவில்பட்டி அருகேயுள்ள வேலாயுதபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் (32) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →