முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருங்காட்சியகம் சாா்பில் இணையவழி சொற்பொழிவு

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் இணைய வழி சிறப்பு சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் இணைய வழி சிறப்பு சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்ட அருங்காட்சியக மூத்த காப்பாட்சியா் ஜெ. முல்லை அரசு சிறப்புரை ஆற்றினாா். உலகில் உள்ள அருங்காட்சியகங்களில் தோற்றங்கள் பற்றிய வரலாறு, இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களில் தோற்றங்கள் பற்றிய வரலாறு உள்ளிட்டவை குறித்துப் பேசினாா்.

இதில், தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ .சத்திய வள்ளி செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →