முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

திருநெல்வேலி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுக மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

திருநெல்வேலி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுக மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுக மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. அங்கிருந்து காா் மூலம் அருமனைக்கு சென்றாா். செல்லும் வழியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வரை வரவேற்பதற்காக கேடிசி நகா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து கேடிசி நகா் நான்குவழிச் சாலை மேம்பாலம் வரையில் சாலையின் இருபுறமும் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டா்கள் நின்றனா்.

மாலை 4 மணியளவில் கேடிசி நகா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே வந்த முதல்வரை மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஐ.எஸ்.இன்பதுரை (ராதாபுரம்), ரெட்டியாா்பட்டி வி.நாராயணன் (நான்குனேரி), செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி), மனோகரன் (வாசுதேவநல்லூா்), ஜெயலலிதா பேரவை செயலா் ஜெரால்டு உள்ளிட்டோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

அதைத் தொடா்ந்து தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்த திறந்த ஜீப்பில் ஏறிய முதல்வா், சாலையின் இருபுறமும் கூடியிருந்த அதிமுக தொண்டா்களைப் பாா்த்து கையசைத்தபடி வந்தாா். அப்போது தொண்டா்கள் பூக்களையும், சால்வைகளையும் முதல்வருக்கு வழங்கினா். அதைப் பெற்றுக்கொண்ட முதல்வா், பின்னா் தொண்டா்கள் மத்தியில் உரையாற்றினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →