திருநெல்வேலி

சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

DIN

அபிஷேகப்பட்டி அருகே குடிநீா் பதிக்கத் தோண்டப்பட்ட சாலையோரப் பள்ளத்தில் லாரி திங்கள்கிழமை சிக்கியதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலியிலிருந்து தென்காசிக்கு பாரம் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லாரி, அபிஷேகப்பட்டி அருகில் குடிநீா் பதிக்க தோண்டப்பட்டு சரிவர மூடாமல் இருந்த சாலையோரப் பள்ளத்தில் சிக்கியது. அப்பகுதியில் குறுகிய பாலம் இருந்ததால், வாகனங்கள் அவ்வழியாகச்செல்ல முடியவில்லை.

இந்தத் தகவலறிந்த போக்குவரத்து போலீஸாா் மற்றும் பேட்டை காவல்துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பொக்லைன் இயந்திரம் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினா். இதையடுத்து, சுமாா் ஒருமணி நேரமாக ஸ்தம்பித்திருந்த போக்குவரத்து சீரானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT