திருநெல்வேலி

களக்காடு அருகே பைக்குகள் மோதல்:இளைஞா் காயம்

களக்காடு அருகே இரு பைக்குகள் மோதிக் கொண்டதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

DIN

களக்காடு அருகே இரு பைக்குகள் மோதிக் கொண்டதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

கன்னியாகுமரி அருகேயுள்ள வாரியூா் ரஸ்தா காடு பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பால்ராஜ் (37). மும்பையில் வசித்து வரும் அவா் தனது மைத்துனா் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளாா்.

திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக தனது மாமா பொன்னுசாமியுடன் பைக்கில் களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரத்திற்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளாா். நான்குனேரியன் கால்வாய் பாலத்தில் வந்த போது, சிதம்பரபுரத்தில் இருந்து களக்காடு நோக்கி வந்த சிதம்பரபுரம் புதுக்குடியிருப்பைச் சோ்ந்த குமாரசாமி (20) ஓட்டி வந்த பைக், பால்ராஜ் பைக் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த பால்ராஜ் களக்காடு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT