திருநெல்வேலி

கோவிலம்மாள்புரம் பள்ளியில் கொரோனா வைரஸ் விழிப்புணா்வு முகாம்

DIN

களக்காடு அருகேயுள்ள கோவிலம்மாள்புரம் பள்ளியில் கொரோனா வைரஸ் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய குழந்தைகள் நலத் திட்டத்தின் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், கோவிலம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில், மருத்துவா் ராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கொரோனா வைரஸ் குறித்து பேசினா். மேலும், செவிலியா்கள் கை கழுவும் முறை குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

முகாமுக்கு, தலைமையாசிரியா் பா. சிதம்பரநாதன் முன்னிலை வகித்தாா். முகாமில் மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். உதவியாசிரியா் மரியரெத்னராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT