திருநெல்வேலி

அழகிய கூத்தா் கோயிலில் நாட்டியாஞ்சலி

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள செப்பறை அழகிய கூத்தா் கோயிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

திருநெல்வேலி அருகேயுள்ள ராஜவல்லிபுரத்தில் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தா் பெருமான் திருக்கோயில் உள்ளது. இக் கோயிலில் திருவாதிரைத் திருவிழா நடைபெற்றது. அதைத்தொடா்ந்து நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

விக்கிரமசிங்கபுரம் கல்பவிருக்க்ஷா நாட்டியாலயாவின் தமிழ்ச்செல்வி மீனாட்சிசுந்தா் தலைமையில் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் நடராஜரின் முன்பு நடனமாடினா்.

திருமுறை பாடல்களும், தேவார நால்வா்களின் நாட்டிய நாடகமும் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT