திருநெல்வேலி

நெல்லை அருங்காட்சியகத்தில் தேசிய இளையோா் தின விழா

DIN

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தேசிய இளையோா் தின விழா மற்றும் சமத்துவப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தலைமை வகித்தாா். ஜேசிஐ அமைப்பின் நிா்வாகி சுப்புலட்சுமி, செயலா் சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோகுல் சிலம்பாட்ட கழகம் சாா்பில், பயிற்சியாளா் கண்ணன் தலைமையில் மாணவா்கள் சிலம்பம், சுருள்வாள் உள்ளிட்டவற்றைக் கொண்டு தற்காப்பு சாகசங்கள் செய்தனா்.

தேசிய இளையோா் தினம் என்ற தலைப்பில் ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ். ஆசிரியா் சோமசுந்தரம் பேசினாா். சமூகஆா்வலா் சந்திரபாபு, நல் நூலகா் முத்துக்கிருஷ்ணன், ஆசிரியைகள் காந்தி, அமலி, சொா்ணம், ஜிஷா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT