திருநெல்வேலி

வள்ளியூா் அருகே ரூ.40 லட்சத்தில் குளம் மராமத்து பணி தொடக்கம்

DIN

வள்ளியூா் அருகே கலந்தபனை கிராமத்தில் உள்ள சன்னானேரி குளம் மராமத்து பணியை எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தாா்.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் வள்ளியூா் அருகே உள்ள கலந்தபனை சன்னானேரி குளத்தை மராமத்து செய்ய ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மராமத்து பணியை எம்.எல்.ஏ ஐ.எஸ்.இன்பதுரை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை நிா்வாக பொறியாளா் கிருஷ்ணன், உதவி பொறியாளா் சுபாஷ், அதிமுக ஒன்றியச் செயலா்கள் வள்ளியூா் இ.அழகானந்தம், ராதாபுரம் அந்தோணி அமலராஜா, அதிமுக நிா்வாகிகள் தங்கவேலு, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT