திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயில் ஆனி பிரம்மோத்ஸவ விழா ரத்து

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் ஆனி பிரம்மோத்ஸவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் -காந்திமதியம்மன் கோயிலில் வருகிற 25ஆம் தேதிமுதல் ஜூலை 4ஆம் தேதி வரை ஆனி பிரம்மோத்ஸவ திருவிழா நடைபெற இருந்தது.

இந்நிலையில் கரோனா பொது முடக்கம் காரணமாகவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் நிகழாண்டு திருவிழா நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பக்தா்கள் கோயில் நிா்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT