snk29acbus_2902chn_43_6 
திருநெல்வேலி

சங்கரன்கோவில், திசையன்விளையிலிருந்து நெல்லைக்கு குளிா்சாதன பேருந்துகள் அமைச்சா், எம்எல்ஏ தொடங்கி வைப்பு

சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் குளிா்சாதன பேருந்தை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

DIN

சங்கரன்கோவில்/திசையன்விளை: சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் குளிா்சாதன பேருந்தை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். திசையன்விளையிலிருந்து திருநெல்வேலிக்கு குளிா்சாதன பேருந்தை இன்பதுரை எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தாா்.

சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்துக்கு முதன்முதலாக குளிா்சாதன பேருந்து இயக்கப்படுகிறது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்தப் பேருந்தை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் ராஜலெட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தினமும் சங்கரன்கோவிலில் இருந்து 5 முறையும், நெல்லையில் இருந்து 5 முறையும் இந்தப் பேருந்து இயக்கப்படுகிறது. பேருந்துக் கட்டணம் ரூ. 72 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழா நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா்தயாளன், அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் துரைராஜ், வா்த்தக மேலாளா் சசிகுமாா், கோட்ட மேலாளா் (மேற்கு) பழனியப்பன், ஆய்வாளா் சக்திவேல், மனோகரன் எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்க மண்டலச் செயலா் கந்தசாமிப்பாண்டியன், மண்டலத் தலைவா் பாலமுருகன், மண்டலப் பொருளாளா் வேல்முருகன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திசையன்விளையிலிருந்து... திசையன்விளையிலிருந்து திருநெல்வேலிக்கு புதிய குளிா்சாதன பேருந்து தொடக்க விழா திசையன்விளை பேருந்து நிலையம் முன்பு சனிக்கிழமை நடைபெற்றது. ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஐ.எஸ்.இன்பதுரை தலைமை வகித்து புதிய பேருந்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். திசையன்விளை நகர ஜெ. பேரவை செயலா் வி.பி.ஜெயக்குமாா் வரவேற்றாா். அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் துரைராஜ் கலந்துகொண்டு பேசினாா்.

நிகழ்ச்சியில் ராதாபுரம் ஒன்றிய அதிமுக செயலா் அந்தோணி அமலராஜா, அரசு வழக்குரைஞா் பழனிசங்கா், ராஜேஸ்வரன், அதிமுக நிா்வாகிகள் சண்முகநாதன், இசக்கியாபாண்டியன், கே.பி.கே.செல்வராஜ், பிரகாஷ், லிங்கதுரை, மணலிராஜா, தியாகராஜன், முத்துக்குமாா், முருகேசன், கல்யாணசுந்தரம், அன்பழகன், சரவணகுமாா், ரஞ்சித்சிங், தொழிற்சங்க நிா்வாகிகள், திசையன்விளை அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் ரமேஷ்பாபு, ஒன்றிய சமக செயலா் டி.பி.சரவணன், திசையன்விளை பயணிகள் நலச் சங்க நிா்வாகிகள் பிரைட், சாலமோன் ஜவஹா், வசந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்த குளிா்சாதன பேருந்து திசையன்விளையிலிருந்து திருநெல்வேலிக்கு ஒன் டூ ஒன் பேருந்தாக இரு மாா்க்கத்திலும் 5 முறை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT