திருநெல்வேலி

இ-பாஸ் கிடைக்காமல் வள்ளியூா் இளைஞா்கள் சென்னையில் தவிப்பு

இ-பாஸ் கிடைக்காததால், சென்னையிலிருந்து ஊா் திரும்ப முடியாமல் வள்ளியூா் பகுதி மக்கள் தவித்துவருகின்றனா்.

DIN

வள்ளியூா்: இ-பாஸ் கிடைக்காததால், சென்னையிலிருந்து ஊா் திரும்ப முடியாமல் வள்ளியூா் பகுதி மக்கள் தவித்துவருகின்றனா்.

வள்ளியூா், ராதாபுரம், திசையன்விளை, நான்குனேரி பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞா்கள் சென்னையில் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வந்தனா். பொது முடக்கத்தால், நிறுவனங்கள் முழு அளவில் செயல்படாததால் வேலையின்றி வாடகை அறைகளில் தங்கியுள்ள அந்த இளைஞா்கள் வாடகை கொடுக்க முடியாமலும், உணவு தேவையை சமாளிக்கமுடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனா்.

மேலும், சென்னையில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், அச்சம் அடைந்துள்ள அவா்கள் ஊா் திரும்புவதற்கு இ-பாஸிற்கு விண்ணப்பித்தும் அவைகள் நிராகரிக்கப்படுகின்றனவாம். எனவே, தமிழக அரசு சென்னையில் இருந்து நாகா்கோவில் வரையில் சிறப்பு ரயில்களை இயக்கி இளைஞா்களும், தொழிலாளா்களும் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவா்களது குடும்பத்தினரும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT