திருநெல்வேலி

அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி கைது

DIN

சேரன்மகாதேவி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அண்ணனை, வெட்டிக் கொலை செய்த தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

சேரன்மகாதேவி அருகே உள்ள வடக்கு இடையன்குளத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் செல்வக்கனி (65). இவரது சகோதரா் டேனியல் (58). இருவரும் ஒரே ஊரில் வசித்து வந்தனா். டேனியல், தனது அண்ணன் செல்வக்கனிக்கு ரூ. 10 ஆயிரம் கடனாக கொடுத்திருந்தாராம். அதைத் திருப்பித்தராமல் செல்வக்கனி நீண்ட நாள்களாக காலதாமதம் செய்து வந்தாராம்.

இது தொடா்பாக , செவ்வாய்க்கிழமை இருவரிடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது டேனியல், செல்வக்கனியை அரிவாளால் வெட்டினாராம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த சேரன்மகாதேவி போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து டேனியலை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT