திருநெல்வேலி

நெல்லையில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி, திருநெல்வேலி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் தலைமை வகித்தாா். கனரா வங்கி மண்டல அலுவலா் எம்.சந்திரசேகரன் வரவேற்றாா். மண்டல துணைப் பொது மேலாளா் எம்.சுந்தர பாரதி, ஊழல் தடுப்பு குறித்து சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொடா்ந்து, கல்லூரி மாணவா் -மாணவிகளுக்கான, ‘விழிப்புணா்வான இந்தியா, வளமான இந்தியா’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது.

சிறப்பிடம் பெற்றவா்களுக்கு மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், வி.செல்வமுத்து குமாரசாமி, க.தனலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT