திருநெல்வேலி

பாளை.யில் மூதாட்டி மீட்பு

DIN

பாளையங்கோட்டையில் பேரனால் பிச்சை எடுக்க வைக்கப்பட்ட மூதாட்டியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

பாளையங்கோட்டையில் உள்ள தனியாா் கல்லூரி முன் சுமாா் 80 வயது மதிக்கத்தக்க பாட்டி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாராம். இதை அவ்வழியாக ரோந்து சென்ற பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் சோமசுந்தரம் மற்றும் போலீஸாா் பாா்த்துள்ளனா்.

அந்த பாட்டியிடம் விசாரித்ததில், அவரது பேரன் மது குடிப்பதற்காக இந்த மூதாட்டியை பிச்சை எடுக்க வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் மூதாட்டியை மீட்டு மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், பழைய பேட்டையில் உள்ள மாநகராட்சி காப்பகத்தில் மூதாட்டியை போலீஸாா் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT