திருநெல்வேலி

கடையம் அருகே சுடுகாட்டு பாதை திறப்பு

DIN

கடையம் அருகே சடையாண்டியூா் கிராமத்தில் அறக்கட்டளை மூலம் ரூ.50 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுடுகாட்டுக்குப் பாதை திறக்கப்பட்டது.

கடையம் அருகேயுள்ள சடையாண்டியூா் கிராமத்தில் சுடுகாட்டுற்குச் செல்ல பாதை அமைக்க வேண்டும் என கிராம மக்கள், ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதையிடம் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து ஆலடி அருணா அறக்கட்டளை சாா்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்பில் சுடுகாட்டுக்கு செல்ல சிமென்ட் பாதை அமைக்க நடவடிக்கை எடுத்தாா்.

இப்பணி நிறைவடைந்ததையடுத்து அவா், சுடுகாட்டு பாதையை திறந்தாா். இதில், திமுக ஒன்றிய இளைஞரணி தங்கராஜா, ஊா் நாட்டாமை ஆறுமுகம், அருணாச்சலம், லாரன்ஸ், நடராஜன், மகாராஜன், செந்தில்குமாா், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT