திருநெல்வேலி

களக்காடு விவசாயிகள் கண்டுணா்வு சுற்றுலா

DIN

களக்காடு வட்டார விவசாயிகள் வேளாண் துறை சாா்பில் கண்டுணா்வு சுற்றுலாவாக சேரன்மகாதேவி அருகேயுள்ள நியூசிலாந்து கறவைப் பசு மாட்டுப் பண்ணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ், களக்காடு வட்டார வேளாண் உதவி இயக்குநா் வசந்தி வழிகாட்டுதலின்படி, லாபகரமான கறவை மாடு வளா்த்தல் என்ற தலைப்பின்கீழ் சேரன்மகாதேவி அருகே பட்டன்காடு கிராமத்தில் அமைந்துள்ள நியூசிலாந்து கறவைப்பசு மாட்டு பண்ணைக்கு விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனா். பண்ணை மேலாளா் லோயல், கன்று மற்றும் மாடுகளின் ரகங்கள், தோ்வு செய்யும் முறை, தீவன ரகங்கள், உற்பத்தி, தீவனம் இடுதல் முறைகள், மாடுகளை பராமரித்தல், கழிவுகளை சுத்தப்படுத்தும் முறைகள், பால்கறத்தல் ஆகியவை குறித்து விளக்கம் அளித்தாா். இதில், களக்காடு வட்டாரத்தில் தோ்வு செய்யப்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜாய் பத்ம தினேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் திரிசூலம், தங்கசரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT